இரவுகளின் அடர்த்தி கடத்தி
இமையெங்கும் வியாபித்திருக்கிறது
நின் கொடியிடை இடையே
பின்னிக்கிடந்திருந்த பொழுதின்
பிம்பம்.
சிரம் சாய்த்து நோக்கிட
சிகை களைந்து
நீளும் பெருமூச்சோடு
அருகே அயர்ச்சியில் உறங்கிகிடக்கிறாய்.
எடுத்து மடிவைத்து
இரவுமுழுக்க ரசிக்கவேண்டும் போலிருந்தது.
பைத்தியக்கார இரவு
அதற்குள் விடிந்திருந்தது.