February 17, 2013
February 16, 2013
February 15, 2013
February 14, 2013
February 13, 2013
February 12, 2013
February 11, 2013
February 10, 2013
February 09, 2013
௨௱௬
பகை நிற்கும் விழிகளுனது,
அனல் கக்கும் மொழிகளெனது,
கடந்திடக்கூடுமோ
இந்த
கொடுங்கனல் நொடிகளை.
மறுமுறை சிரித்திடல் ஆகுமா
என
தவிக்குது உதடுகள்.
அனல் கக்கும் மொழிகளெனது,
கடந்திடக்கூடுமோ
இந்த
கொடுங்கனல் நொடிகளை.
மறுமுறை சிரித்திடல் ஆகுமா
என
தவிக்குது உதடுகள்.
February 08, 2013
௨௱௫
இரவுகளின் அடர்த்தி கடத்தி
இமையெங்கும் வியாபித்திருக்கிறது
நின் கொடியிடை இடையே
பின்னிக்கிடந்திருந்த பொழுதின்
பிம்பம்.
சிரம் சாய்த்து நோக்கிட
சிகை களைந்து
நீளும் பெருமூச்சோடு
அருகே அயர்ச்சியில் உறங்கிகிடக்கிறாய்.
எடுத்து மடிவைத்து
இரவுமுழுக்க ரசிக்கவேண்டும் போலிருந்தது.
பைத்தியக்கார இரவு
அதற்குள் விடிந்திருந்தது.
February 07, 2013
February 06, 2013
௨௱௩
யாதொரு தவறுமின்றி
வசைமொழி வாங்கிடும்
பொழுதினில்
மெல்லத்தலை
கவிழ்ந்து
உள்ளழுது
வெளியுதிர்ப்பாயொரு
மென்புன்னகை.
அக்கணமே முடிந்திட வேண்டும் பிணக்கு,
முத்தம் தந்து
முகிழ்த்திட வேண்டும் நின்னை.
February 05, 2013
February 04, 2013
௨௱க
சட்டென மின்னொளியருந்த
இரவொன்றில்
நின்னொடு
சின்ன ஒளிவெளிச்சத்தில்
தின்னத்தானே
இந்த பகலென்று
நகர்த்திடும்
நாட்களிடை
எப்போது வாய்க்குமந்த
பொன்னாள்.
February 03, 2013
௨௱
ஏதாவது
மொழிந்து கொண்டயேயிருக்கும்
இந்தக்கடல்
தனிமைசூழ வந்தமர்ந்திருந்த
அத்தனை
பின்மாலை பொழுதிலும்.
ஏதும் புரியாமல்
எண்ணிக்கொண்டிருப்பேன்
நுரையென உடையும்
கரைதொடுமலைகளை.
உன்னோடு வந்தமரும்
முன்மாலைகளில்
என்னிடம் மொழியாடுவதேயில்லை
இந்தக்கடல்.
நம்தனிமைகளை
நமதாக்கிவிட்டு கரையோடு கதைபேசியழிகிறது.
February 02, 2013
February 01, 2013
௱௯௮
பேரங்காடி தெருக்களில்
நின் கரம் பிடித்து
நடைபழகும்
"அற்புதம்"
தப்பென எண்ணி
தவறிழைத்தேன்.
மன்னித்து கரம்பிடிடி.