November 26, 2013
அம்மு
வாழ்வினி என்றென்றும்
உன்னோடு
என்றாகி
ஆண்டொன்றானது
இன்றோடு.
அள்ள அள்ளக் குறையாத
செல்வம் அன்பன்றி
வேறில்லை,
அந்த அட்சயம்
நீயன்றி யாருமில்லை.
நானற்ற நாட்களிடை
நீயுற்ற வேதனையை
அருகிருக்கும் பொழுதுகளில்
அறிந்திடத் தந்திடுமின்
காதல்
என்றென்றும் நெஞ்சோடு.
Newer Post
Older Post
Home