February 13, 2013
தருணங்கள்
எண்ணி மகிழும் தருணங்கள்
எத்தனை தந்தேனுனக்கு?
என்றெண்ணிட,
கால் நனைத்து,
கைவிரல் தழுவி,
தலை கழுவி,
மேலேறி
மூச்சடைக்கிறது.
நீ
நாளும் சிந்திய
கண்ணீர்த்துளி.
வார்த்தை அமிலங்கள்
வீசி உன்னை
வதைத்த
நொடிகள் நினைவெழ மூச்சடைக்கிறது.
Newer Post
Older Post
Home