February 13, 2013

தருணங்கள்

எண்ணி மகிழும் தருணங்கள் 
எத்தனை தந்தேனுனக்கு? 
என்றெண்ணிட,

கால் நனைத்து, 
கைவிரல் தழுவி, 
தலை கழுவி, 
மேலேறி
மூச்சடைக்கிறது.

நீ 
நாளும் சிந்திய 
கண்ணீர்த்துளி.


வார்த்தை அமிலங்கள் 
வீசி உன்னை 
வதைத்த 
நொடிகள் நினைவெழ மூச்சடைக்கிறது.