November 30, 2013

பொழுது

பெருமழை 
பெய்ந்து 
ஒய்ந்தது போல்
நினைவுகளெங்கும்
துளித்துளியாய்  
சொட்டிக் கொண்டிருக்கிறது 
சேர்ந்து 
கதைபேசி 
ஆலிங்கனம் 
செய்திருந்த பொழுதுகள்.