February 08, 2013

௨௱௫


இரவுகளின் அடர்த்தி கடத்தி 
இமையெங்கும் வியாபித்திருக்கிறது 
நின் கொடியிடை இடையே 
பின்னிக்கிடந்திருந்த பொழுதின் 
பிம்பம்.

சிரம் சாய்த்து நோக்கிட 
சிகை களைந்து 
நீளும் பெருமூச்சோடு 
அருகே அயர்ச்சியில் உறங்கிகிடக்கிறாய்.

எடுத்து மடிவைத்து 
இரவுமுழுக்க ரசிக்கவேண்டும் போலிருந்தது.

பைத்தியக்கார இரவு 
அதற்குள் விடிந்திருந்தது.