November 30, 2013
பொழுது
பெருமழை
பெய்ந்து
ஒய்ந்தது போல்
நினைவுகளெங்கும்
துளித்துளியாய்
சொட்டிக் கொண்டிருக்கிறது
சேர்ந்து
கதைபேசி
ஆலிங்கனம்
செய்திருந்த பொழுதுகள்.
November 28, 2013
பொழுது
அருகிருந்து
கால் விரல் சொடுக்கி
அகமகிழ்ந்திருந்திடும்
அருந்தருணமிழந்து,
முகமறியா
மொழிதெரியா
புதுநகரினில்,
விடைபெறுகையில்
விரலசைத்து
வழியனுப்பிய
கடைநிமிடங்கள்
எண்ணிக் கழியுதென்
பொழுது.
November 26, 2013
அம்மு
வாழ்வினி என்றென்றும்
உன்னோடு
என்றாகி
ஆண்டொன்றானது
இன்றோடு.
அள்ள அள்ளக் குறையாத
செல்வம் அன்பன்றி
வேறில்லை,
அந்த அட்சயம்
நீயன்றி யாருமில்லை.
நானற்ற நாட்களிடை
நீயுற்ற வேதனையை
அருகிருக்கும் பொழுதுகளில்
அறிந்திடத் தந்திடுமின்
காதல்
என்றென்றும் நெஞ்சோடு.
November 19, 2013
வார்த்தை
சாரமற்ற
வழமை வார்த்தைகள்
வழி
சொட்டும் சோகம்
மௌன
ரணத்திலும்
கொடிது.
November 18, 2013
பயம்
தூரப்பிரிவறுக்கும்
வழி
துரிதம்
அறிகிலையேல்
நின்
துயரம்
தினம் வளர்ந்தே
நம்
நேசம் தின்றிடுமோவென
அஞ்சி
நாள் இழந்தேன்.
Newer Posts
Older Posts
Home