May 23, 2013

யாக்கை

தனித்துறங்கி 
கழிந்தன 
சில இரவுகள்.

இறுக்கி அனைத்த 
கைகளிடையே 
காற்று மட்டுமே 
மிச்சமிருந்தது.

May 21, 2013

தனிமை


இனியொரு
பொழுதேனும்
தனித்திருப்பதெங்கனம்,
காற்றிடை
கதை பேசும் 
மரமென்றானது
மனம்.

May 19, 2013

கரம்


பாதம்
பட்டுடையும்
நுரையுடை அலைகடல்
கரை மணலழுத்தி
கரம் பற்றி நடந்திட
ஓடி ஒளியிதிந்த
அலையாடும் நண்டுகள்,
பாதம் பதிந்த பள்ளங்களில்....


May 08, 2013

மௌனமே!

நீள யோசித்து 
நெற்றி முத்தமொன்றிட்டு 
ஆழ்மௌனம் 
சூடிக்கொண்டாய்.

என்னென்று கேட்கமாட்டேன்,
ஏதாய் 
இருந்தால்தானென்ன?

May 05, 2013

அணை

எலும்புகள்  
எல்லாம் உடைபடாது 
எப்போதும் போலில்லாமல் 
இப்போதேனும் 
இறுக்கி அணை.


May 03, 2013

ஒரு சொல்

தாளமுடியாத சோகத்துடன் 
நீளுமிந்த இரவின் 
சோகம் 
முடித்துவைக்க 
ஒற்றைச்சொல் போதும்.

யார் 
உச்சரிப்பது 
என்பதன் சூன்யத்தில் 
வெறுமை நிறைந்திருக்கிறது.