May 23, 2013
யாக்கை
தனித்துறங்கி
கழிந்தன
சில இரவுகள்.
இறுக்கி அனைத்த
கைகளிடையே
காற்று மட்டுமே
மிச்சமிருந்தது.
May 21, 2013
தனிமை
இனியொரு
பொழுதேனும்
தனித்திருப்பதெங்கனம்,
காற்றிடை
கதை பேசும்
மரமென்றானது
மனம்.
May 19, 2013
கரம்
பாதம்
பட்டுடையும்
நுரையுடை அலைகடல்
கரை மணலழுத்தி
கரம் பற்றி நடந்திட
ஓடி ஒளியிதிந்த
அலையாடும் நண்டுகள்,
பாதம் பதிந்த பள்ளங்களில்....
May 08, 2013
மௌனமே!
நீள யோசித்து
நெற்றி முத்தமொன்றிட்டு
ஆழ்மௌனம்
சூடிக்கொண்டாய்.
என்னென்று கேட்கமாட்டேன்,
ஏதாய்
இருந்தால்தானென்ன?
May 05, 2013
அணை
எலும்புகள்
எல்லாம் உடைபடாது
எப்போதும் போலில்லாமல்
இப்போதேனும்
இறுக்கி அணை.
May 03, 2013
ஒரு சொல்
தாளமுடியாத சோகத்துடன்
நீளுமிந்த இரவின்
சோகம்
முடித்துவைக்க
ஒற்றைச்சொல் போதும்.
யார்
உச்சரிப்பது
என்பதன் சூன்யத்தில்
வெறுமை நிறைந்திருக்கிறது.
Newer Posts
Older Posts
Home