February 15, 2013

எழுதிடா கவி

பேர் சொல்லி அழைக்குமுறவு,
நோய் கொள்ள அணைக்கும் கரங்கள்,
நான் வெல்ல சிரிக்கும் இதழ்கள்,
மென் கிள்ளலில் சிவக்கும் சதைகள்,
இடை தொட சொருகும் விழிகள்,

அத்தனையும் 
எனக்கான உன் கவிகளன்றி, வேறென்ன?