மின்னொளி அனைத்து
மூன்றாம் பிறை
வானம் காட்டி
மடியில் கிடத்தி
விரல் பிடித்து
நகம் நெருடி
ஆயிரமாயிரம் யுகக்கதைகளை
ஓரிரவில்
சொல்லிட எத்தனிக்கும்
கிறுக்குச்சிறுக்கியுன்
பைத்தியக்காரத்தனங்களுக்கு
எல்லையேயில்லை...
ரணம்
மறைத்து,
இதழ்
சுளித்து,
விழி
களைத்து,
விரல்
பிணைத்து,
உடலுதறிய
உயர் பருகிய
முதல் கலவியை
தினம் கொடடி.