February 22, 2014
நினைவு
அரையுறக்க
நினைவுதப்பிய
தேடலில்
கையெதிர்படும்
பஞ்சுப்பொதி,
மறுபடியும்
நினைவுறுத்தும்
தனிமையுணர்ந்து
தன்னிலை
மறந்துறங்கிய
பின்னிரவை.
மறவேன்
நேற்று
நடந்த
நிகழ்வெனத்
தோன்றும்
நம்
முதல்
சந்திப்பில்
நாணமொட்டிக்கொண்டிருந்த
உன்
முகம்
அலுப்பதேயில்லை.
பொருள்
காத்தருப்பகளில்
பொருள்படுகிறது
அருகின்மையின்
காரணங்கள்.
வழி
கேலிகள்
வடம்பிடித்திழுக்கும்
வம்புகளெல்லாம்
ஊடல்
வழியோடும்
கூடல்
வாய்ப்புகளாய்.
காரணம்
புன்னகைகளை
மட்டுமல்ல
கண்ணீர்த்துளிகளையும்
மனம்
கணக்குவைப்பதில்லை,
காதல்
நாளும்
வளர
அதுவொன்றே
பெருங்காரணம்.
February 14, 2014
பெருங்கனவு
பிரிதலும்
பிரிதல் நிமத்தமும்
அற்றதொரு
காலப்பெருவெளியில்
உன்னோடு
கழனியேறி,
களைபறித்து,
உழுதுண்டு வாழும்
கனவுன்டு
தோழி
தவம்
நெஞ்சேறியுறங்காது
மௌனங்கள் பேசு
மணிக்கணக்கில்
கேட்டிருக்குறேன்.
கருவி
தூரமறுக்கும்
கருவியொன்றிதுவரை
கண்டுபிடிக்காமல்
இருப்பதன்
காரணம்
புரிபடவில்லை
'தேவை'
என்போலெத்தனை
உள்ளங்களுக்கு
நன்றி
தொலைவிருக்கும்
இரவுகளில்
அருகிருந்தென்
துயர்
துடைக்குமுன்
நிழற்படங்களிடம்
நன்றி
காட்டுவதில்லை நான்
உடனிருக்கும் பொழுதுகளில்.
மடிகொடு
தனித்துறங்கும்
இரவுகளில்
தலையனையென்று
எண்ணுவதில்லை
பஞ்சுப்பொதியை,
உன் மடியாகி
தலை வருடும்.
வழி
பொய் கொல்லும்
வலியெழ
இனியொருக்கிலும்
இடந்தறேன்,
மெய் வலி
வழி இனி.
February 04, 2014
புலன்
செவி
திறந்து
கேட்டிருப்பேன்
இனியெப்போதும்
முத்தமிட
மட்டுமே
வாய் திறப்பேன்.
February 03, 2014
கடிதம்
வார்த்தைகளும்
மௌனங்களும்
விளங்க வைக்காததை
எழுத்துகள்
சாத்தியமாக்குமென
எண்ணியிருக்கவில்லை.
கண்ணீர்
வழிந்தோட
எழுதியிருந்த
கடிதத்திற்கு நன்றி!
February 02, 2014
தயார்
தூரமேகும்
பயணங்களுக்கு
நான்
தயாராகும் முன்
உனக்கான
தயாரிப்புகள்
தொடங்கிவிடுகிறது.
February 01, 2014
துயிலறு
நெஞ்சேறி
உறங்கடி,
இரவெல்லாம்
விழித்துன்
குழல்
கோதிக்கிடக்கிறேன்
கோடி முறை.
Newer Posts
Older Posts
Home