நெஞ்சனைத்து
ஜன்னல்
வழி
விழும்
மழைத்துளி
அள்ளி
முகம் நனைக்கும்
காலம்
வேண்டும்
இனி
வாழும் மட்டும்.
கண்ணீரெனவழிந்தோடுமென்
மீதான
நின்
கோபங்களுக்கு
அந்நீர்
பருகும்
இதழ்களின்றி
பிறிதோர்
ஆதரவில்லையென்னிடம்.
இருவருக்குமிடையே
இட்டு நிரப்ப
இரண்டிலக்கத்தில்
பயண தூரம்,
எண்ண மறந்து
எண்ணம் அறுந்து
என
என்ன நிகழ்ந்தாலும்
எனை
என்றும் நினைந்திருக்கும்
உன்
முகமேயென் திசை.