December 25, 2013
அற்புதம்
வெஞ்சொல்
உமிழ்ந்துரையாடி
மனம் நோகத்தரும்
தருணங்களில் கூட
கடைச்சொல்லாய்
'உம்மா'
என்றே முடித்துவைக்கும்
நீயொரு
அற்புதப்பிறவி.
December 22, 2013
மருந்து
இனிவரும்
இரவெல்லாம்
நினைவிருந்து
மருந்தாகும்
வரும்பிரிவிற்கு.,
மார்மீது
தலைசாய்த்துறங்கய
இம்மதியம்.
Newer Posts
Older Posts
Home