February 03, 2013

௨௱


ஏதாவது 
மொழிந்து கொண்டயேயிருக்கும் 
இந்தக்கடல் 
தனிமைசூழ வந்தமர்ந்திருந்த  
அத்தனை 
பின்மாலை பொழுதிலும்.
ஏதும் புரியாமல் 
எண்ணிக்கொண்டிருப்பேன் 
நுரையென உடையும் 
கரைதொடுமலைகளை.

உன்னோடு வந்தமரும் 
முன்மாலைகளில் 
என்னிடம் மொழியாடுவதேயில்லை 
இந்தக்கடல்.
நம்தனிமைகளை 
நமதாக்கிவிட்டு கரையோடு கதைபேசியழிகிறது.