ஏதாவது
மொழிந்து கொண்டயேயிருக்கும்
இந்தக்கடல்
தனிமைசூழ வந்தமர்ந்திருந்த
அத்தனை
பின்மாலை பொழுதிலும்.
ஏதும் புரியாமல்
எண்ணிக்கொண்டிருப்பேன்
நுரையென உடையும்
கரைதொடுமலைகளை.
உன்னோடு வந்தமரும்
முன்மாலைகளில்
என்னிடம் மொழியாடுவதேயில்லை
இந்தக்கடல்.
நம்தனிமைகளை
நமதாக்கிவிட்டு கரையோடு கதைபேசியழிகிறது.