நீ நிகழ்த்திக்காட்டும்
மாற்றங்களில்
புரண்டு கிடக்கிறதென் பூமி.
எனக்கு அறிமுகமில்லாத
என்னை
உலகுக்கே அறிமுகபடுத்தியவள் நீ.
என் புன்னகையில்
பொறுப்புணர்வு
கூடியுள்ளதாக நண்பன் உரைக்கிறான்.
நீ தானே காரணம்.
உன்னால் நான் புதியவனாகவில்லை
பொலிவு பெறுகிறேன்.