August 24, 2012

௩௭


புரிந்து கொண்ட 
பிறகு 
சண்டையிடுவதாய்...

மகிழ்திருக்கும் பொழுதில் 
கண்ணீர் 
உகுப்பதாய்...

பிரிந்திருக்கும் நொடிகளில் 
வெகுநெருக்கமாய் 
அருகிருப்பதென ...

எண்ணற்ற 
மாயங்கள் 
காட்டுதிந்த காதல்.