August 06, 2012

௧௮


புரியாத நின் ப்ரியங்களை
கடிவாளங்கள்
என்றெண்ணிக் குழம்புகிறேன்.

உயிர் நீளுமுன் நேசத்தை
வார்த்தைகளால்
கீறி ரணமாக்குகிறேன்.

நான் இத்தனை குழப்பவாதியென்பதும்
நீ எத்துனை நேசக்காரியென்பதும்
எனக்கு எப்போதுதான் புரிபடுமோ.?