August 06, 2012

௧௯


பிரிய மனமில்லாது
பிரியங்கள் குவியமிடும்
பிரிவு நாட்களுக்கு
முந்திய மாலை பொழுதுகளில்
பிரிவுணர்த்தி
விழிநிரப்பி பிரிந்து செல்கிறாய்!
கண்ணீரால் மட்டுமல்ல!
கண் முழுக்க நிறைந்திருக்கும்
நின் பிம்பங்களாலும்!