மனமேடையொன்றன்
முன் நின்றென்
மணநாள் குறித்தொரு
சிறுகனவில் யான்.
நிகழ்கால காட்சிகளில்
முகம் மாற்றியொரு
நிகழ்வை
நிகழ்த்திக்காட்டுகிறது
மனம்.
நீயென் கரம்பிடித்தபடி
நானுன் புன்னகைக்குள்
ஒளிந்து கொள்ளுமந்த
நாளை எதிர்பார்த்து
மனம் நகரும்
மாலையிது.