August 11, 2012

௨௪


நின்
நேசமுணர்த்தும்
என்
நோவுகளில்
மகிழ்ந்திருக்கிறேன்.

உன் கரம்
பட தீரும்
என் நோய்கள்
இன்னும் சற்று நேரம்
இருந்துவிட்டு போகலாம்.

நீ
அருகிருக்க
விலகிடும் பிணிகள்
நீ
தொலைவிருக்க
அருகிருக்கட்டும்.
என்னைப்போல் நின் வரவையெண்ணி.