August 10, 2012

௨௩


தோள்சாய்ந்து
விரல் கோர்த்து
தலை கோதி
மகிழ்ந்து
சோகமாகி
மௌனமாகி
சண்டையிட்டு
சமாதானப்படுத்தி 
ஊட்டிவிட்டு பசியாறி
ஊடலிட்டு உறவாடி
என
எல்லையற்று
வளைந்து வளைந்து
நீளும் சாலைகளின் ஊடாக
விடிகாலையொன்றில்
தொடங்கும்
நெடுந்தூரப்பயணம்
உன்னோடு வேண்டும்.