நேரங்கடத்தும்
கற்பனைகளின்
நீளத்தினூடே
கழியுதிந்த நாட்கள்.
கற்பனைகளத்தனையையும்
அரைநொடிப் பார்வையில்
பூர்த்தியாக்கி
புன்னகைக்கிறாய்.
இத்தனை விரைவாய்
நீ
காரியமாற்றினால்,
இனி
எத்தனை விரைவாய்
யான்
கற்பனையாற்றுவதோ ?