September 28, 2012

௭௨

"நளினம் தெரியாதுனக்கு"
என்பேன்,
"கற்றுத்தா"வென்பாய் 
நாணமின்றி...

நாசுக்காய் முத்தமிட அறியாயென்றால்
"நானென்ன செய்ய., பழக்கமில்லை"
என்பாய்...

"சிருங்கார ரசம்" 
தெரியுமாவென்றால்
"மிளகு ரசம் கூடத் தெரியாதே" என்பாய் 
உச்சி முளைக்கும் 
கோபம் கிளப்பும் நகைச்சுவையில்...

எத்தனை "தெரியாதுகள்"
உன்னிடம்.

இந்த "தெரியாதுகளின்"
துளைகளில் 
இட்டு நிரப்ப 
என்னிடம் உண்டு
ஏராள 
சங்கதிகள்.