September 02, 2012

௪௬


பொழுது சாயும்
பொழுதெல்லாமுன்
வாசமெடுக்கிறது
எனக்கு.

தூரத்திருக்கும் 
பொழுதுகளில் 
துரத்திவந்து
நிலைத்திருக்குமிந்த 
சுகந்த பெருக்கின் 
சூட்சமமறியும்  வேட்கையிழந்து
மயங்கிக்கிடக்குதென்
மதி.

தொலைவிருந்தும் 
அருகிருக்கும் 
அதிசயமறிவி
எனக்கும்.