பொழுது சாயும்
பொழுதெல்லாமுன்
வாசமெடுக்கிறது
எனக்கு.
தூரத்திருக்கும்
பொழுதுகளில்
துரத்திவந்து
நிலைத்திருக்குமிந்த
சுகந்த பெருக்கின்
சூட்சமமறியும் வேட்கையிழந்து
மயங்கிக்கிடக்குதென்
மதி.
தொலைவிருந்தும்
அருகிருக்கும்
அதிசயமறிவி
எனக்கும்.