September 10, 2012

௫௪

அடைமழை
பெய்தோய்ந்த 
பின்னிரவொன்றில் 
நின்னை 
அழவைத்துப்போன 
பெருந்தவறுணர்ந்திட
உயிர் கவ்வும் 
சோகம் 
நெஞ்செல்லாம் நிறைந்தென்
மொழிதின்று போனது.

விழி கவிழ்ந்து 
மௌனமாய் கேட்கிறேன்
மன்னிப்பும்,
மறுதலிப்பற்ற 
மாற நின் பேரன்பும்.