அடைமழை
பெய்தோய்ந்த
பின்னிரவொன்றில்
நின்னை
அழவைத்துப்போன
பெருந்தவறுணர்ந்திட
உயிர் கவ்வும்
சோகம்
நெஞ்செல்லாம் நிறைந்தென்
மொழிதின்று போனது.
விழி கவிழ்ந்து
மௌனமாய் கேட்கிறேன்
மன்னிப்பும்,
மறுதலிப்பற்ற
மாற நின் பேரன்பும்.