September 23, 2012

௬௭

விரல் தடவிட உடன் பறந்திடும் குளிர் நோவு,
இருள்சூழ் மழையிரவில் கேசப்பெருவளியிடை தொலைத்திடும் மெய்,
நாளிதழ் படிக்கையில் பின்னிருந்து காதுமடல் கவ்வும் இதழ்கள்,
மார்முட்டி சண்டையிடுமுன் கரம் பற்றி மார்சேர்த்தனைத்து கழியும் பொழுது,
பொங்கிவரும் கண்ணீர்த்துளிகளை உன் மார் பாய்ச்சுமென் விழி,
.
.
.
.
.
.
என் பால்யமெங்கும் கொட்டிகிடக்குமிந்த  கனவுகளின் 
நாயகி நீ!