விரல் தடவிட உடன் பறந்திடும் குளிர் நோவு,
இருள்சூழ் மழையிரவில் கேசப்பெருவளியிடை தொலைத்திடும் மெய்,
நாளிதழ் படிக்கையில் பின்னிருந்து காதுமடல் கவ்வும் இதழ்கள்,
மார்முட்டி சண்டையிடுமுன் கரம் பற்றி மார்சேர்த்தனைத்து கழியும் பொழுது,
பொங்கிவரும் கண்ணீர்த்துளிகளை உன் மார் பாய்ச்சுமென் விழி,
.
.
.
.
.
.
என் பால்யமெங்கும் கொட்டிகிடக்குமிந்த கனவுகளின்
நாயகி நீ!