October 01, 2012

௭௫

பால்யம் தொட்டு
தொடரும் 
இரவெல்லாம் 
நினைவெழும்
நீள்கலவியின்பம்
தேடும் 
நெடும்பயணம் 
முடிவுறும் 
அந்நாளில் 
அடர் மௌனங்கள் 
அர்த்தப்படும் 
தருணங்களில் 
பெருமூச்சுகள் 
சம்சாரித்துக்கொள்ளும் 
தேக்கிவைத்த 
விரகங்களை.