December 04, 2012

௱௩௯

மடிதூங்கிய வைகறை,
ஊட்டிவிட்டுப் பசியாறிய காலை,
பின்னோடும் மரங்களை சலிக்காது வேடிக்கை பார்த்த நண்பகல், 
எதிர்வருங்கால கதை பேசிக்கழித்த ஏற்பாடு, 
பெருங்கனவோடு வந்திறங்கிய மாலை,
என மிளிர்ந்த
நெடும்பயணம் 
யாமப்பொழுதில் 
நம் கூடல் சத்தங்களின் 
ஆர்பரிப்பில் 
மௌனித்திருக்கும்.