மடிதூங்கிய வைகறை,
ஊட்டிவிட்டுப் பசியாறிய காலை,
பின்னோடும் மரங்களை சலிக்காது வேடிக்கை பார்த்த நண்பகல்,
எதிர்வருங்கால கதை பேசிக்கழித்த ஏற்பாடு,
பெருங்கனவோடு வந்திறங்கிய மாலை,
என மிளிர்ந்த
நெடும்பயணம்
யாமப்பொழுதில்
நம் கூடல் சத்தங்களின்
ஆர்பரிப்பில்
மௌனித்திருக்கும்.