மனக்குகையின்
பெருஞ்சுவரொன்றில்
காலத்தால்
நீங்காததொரு நீள் ஓவியம்
வரைந்துகொண்டேன்.
பேரிரைச்சலோடும்
பெரும்பலத்தோடும்
கொள்ள வரும் பேரலைக்கு
சிக்கி
தொடர்பறுக்கும் விரல்களை
உப்புநீரில்
தெளிவறுந்த விழிகள் தம்
தேவையின்றித் தேடி
அரைநொடியில்
விரலிடுக்கை
நிரப்பிக்கொள்ளும்
நம் அனிச்சை செயல்
நிரம்பியதொரு அற்புத மெய்யோவியம்.