December 05, 2012

௱௪௦

மனக்குகையின் 
பெருஞ்சுவரொன்றில் 
காலத்தால் 
நீங்காததொரு நீள் ஓவியம் 
வரைந்துகொண்டேன்.

பேரிரைச்சலோடும் 
பெரும்பலத்தோடும் 
கொள்ள வரும் பேரலைக்கு
சிக்கி 
தொடர்பறுக்கும் விரல்களை 
உப்புநீரில் 
தெளிவறுந்த விழிகள்  தம் 
தேவையின்றித் தேடி 
அரைநொடியில் 
விரலிடுக்கை 
நிரப்பிக்கொள்ளும் 
நம் அனிச்சை செயல் 
நிரம்பியதொரு அற்புத மெய்யோவியம்.