என்
வசைகளின்
வாழ்வு
இருநூறு நொடிகள் தான்
இப்போதும்.
விரல் பிணைத்து
தோள் சாய்ந்து
மாரில் குத்தும்
கைகளுக்காகத்தான்
இன்னும் ஏங்குகிறேன்.
நகை மறைத்து
விழி தவிர்த்து
ஒதுங்கியிருத்தலென
உன் கோபமும்
அதன் காலமும்
மாறிடவேயில்லை.