நேரம்,
இவ்வளவு மெதுவாக
நொடிகளை ஒருபோதும் கடத்தியதில்லை...
தூரம்,
எல்லைகளற்று இப்படி
விரிவடைந்து கொண்டே போனதில்லை...
தனிமை,
இத்தனை கொடூரமாய்
என்னோடு பழகியதேயில்லை...
'ப்ரிய'மானவளே
பிரிவுணர்த்தியது போதும்
அருகிரு!