தனியே காணக்கிடைத்த
காலரை நொடியிடை
கட்டியணைத்து
கன்னம் உதடென
சடுதியில்
முத்தமிட்டு
எச்சிலீரம்
காயும்வரை
எட்டியிருந்து
விழிமுட்டி முட்டி
மொழிபகிரும்
மென்விழியால்
நின்
மொழிபருகிய
இளமஞ்சள் மாலை
இனி
வாய்ப்பதென்நாளோ ?