January 04, 2014

பொழுது

வெட்டி
ஒன்றன் மேலொன்றாய்
அடுக்கிவைத்த
ஒற்றை மரத்தின்
இரண்டு பாகங்களென
என்
நெஞ்சோடு படர்ந்திருக்கும்
நின்
குழல் கோதி
பொழுதிழக்கும்
கலவிக்கு முன்னான
அப் பொழுதே
சொர்கத்தின் 
பக்கத்திலிருப்பதென்றுணர்ந்தேன்.