January 03, 2014
தூரம்
பாதைகள் மாறி
பயணங்கள் மாறி
படுக்கைகள் மாறி
தூரமெண்ணி
துயல் கொள்ளாது
தனிமையில் புரளும்
உடலம்
எப்படியோ விளங்கிக்கொண்டது
நேற்றிருந்த கதகதப்பு
இன்றில்லையென்பதை.
Newer Post
Older Post
Home