நாற்புறமும் சூழிட்ட
சுவர்களின் சூன்யத்தில்
கழியுமிந்த
பேரிருளிரவில்
வெளிச்ச மின்னல்
வெட்ட
திடுக்கிட்டெழுந்து
திக்குகள் நோக்கித்
திரும்பிட
ஒப்பனை பொம்மைகளாய்
ஓவியப் பெருந்திரளாய்
எத்திசை நோக்கினும்
இவள் முகமே!