January 18, 2013

௱௮௪

குளிர்நிரப்பிய தனியறை 
விடுயெனை எனும் நடை 
விரல்பட வழியும் விரகம் 
ஆண்டுகள் வளர்த்த காமம்
யார்வென்றதெனும்   கேள்வி 
வியர்வை ஊற்றி நடத்திய வேள்வி 
 அடுத்தென்னவெனும் தேடல் 
 அசைவற்ற கலவி 
வறண்ட இதழ்களின் நீண்ட முத்தச்சத்தம் 
மூச்சிரைக்கும் அதிர்வுகள் 
இருளில் ஒளிரும் தேகம்

 ஒவ்வொரு இரவும் புதிது.
ஒவ்வொரு கல்வியும் இனிது.