சேமித்து வைத்த ரணதருணங்கள் சிலதை காணோம்.
பழைய புன்னகைகள் ஊடே சில புதுவாசத்துடன்.
கண்ணீர்த்துளிகள் சிந்திய இடங்களில் சிரிப்பின் ஒலிகள்.
துருவேறிய முள்கீறும் வழமை வழிகளிடை மலர் சுகந்தம்.
ஈரத்தலையனையில் மறந்து போன தாலாட்டின் புது மெட்டு.
...
...
...
...
நிறம் மாற்றிய பூக்களோடு
நீ வருகிறாய் புன்னகையோடு.