மழையை பிரசவித்து
பிறப்பெடுக்கும் விடியல்களில்,
கதகதப்பு தேடி நீளும்
கரங்களின் மெல்லிய அணைப்பும்...
களைந்த தலைமுடி ஒதுக்கி
நகரும் விரல்களின் தீண்டலும்...
அர்த்தமற்று
அனிச்சையாய்
மார் பதியும் முத்தமும்...
இன்னும் என்னென்னவோ என்ற
கற்பனைகளில் கழிகிறது
சாளரத்தில்
சொட்டிக் கொண்டிருக்கும்
மழை நீர்
பார்த்து விடியும்
ஒவ்வொரு விடியலும்.