July 18, 2012

ஒரு ஜென் துறவி
தேநீர் அருந்துவதை போல,
காலை சூரியன் பனித்துளியை
உறிஞ்சிக்கொள்வதை போல,
பெருமழைக்கு முந்திய மேகங்கள் காற்றின்
ஈரப்பதமனைத்தையும் வெகுமெதுவாய் புசிப்பதைபோல,
அன்பிற்கினியவர்களுக்கு இடையிலான சண்டைச்சத்தங்களை
முடிவிலியற்ற அடர் மௌனம் விழுங்கிக்கொள்வதை போல,

முழு ஈடுபாட்டோடு,
எந்த சலனமுமற்று,
வெற்றிடத்தை நிரப்பும் காற்றென
அனிச்சை செயலாய்
என்னுள் நிறைந்திருக்கும்
உன்னுள் நிறைகிறேன்.